ஒருதலைக் காதலால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

622

girl

இளைஞர் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி தொல்லை கொடுத்ததால் செவிலியர் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதாச்சலம் மாவட்டம் பூதாமூர் ஏனாதிபேட்டை ஊரை சேர்ந்தவர் செல்லமுத்து. கூலி தொழிலாளியான இவரின் மகள் புஷ்பலதா அதே ஊரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த தனசேகர் புஷ்பலதாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும், தன்னை காதலிக்குமாறு தினமும் புஷ்பலதாவை பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த புஷ்பலதாவை தனசேகர் ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகில் வழிமறித்து தன்னை காதலிக்குமாறு மீண்டும் வலியுறித்தினார்.

இதனை புஷ்பலதா ஏற்காததால் கோபம் தலைக்கேறிய தனசேகர், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவரின் சுடிதார் துப்பட்டாவை வைத்து புஷ்பலதா கழுத்தை நெரித்துள்ளார்.

அவனிடம் இருந்து எப்படியோ தப்பித்த அவர் அழுது கொண்டே வீட்டை அடைந்ததுடன் வீட்டின் பின்னால் உள்ள மரத்தில் துப்பட்டாவால் தூக்கிலிட்டு கொண்டார்.

அவர் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

9 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கு காரணமான தனசேகரை பொலிசார் கைது செய்து பின்னர் நீதிமன்ற உத்தரவுடன் அவனை கடலூர் சிறையில் அடைத்தனர்.