மனைவின் தலையை துண்டித்த கணவன் : தலையின்றிக் கிடந்த உடலால் பரபரப்பு!!

493

wife

நெல்லையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையை அடுத்த வெள்ளாளன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 47). இவர் பஞ்சாயத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜமுனா (வயது 45). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

முத்துராஜூக்கு மது குடிக்கு பழக்கம் இருப்பதால், அவர் அடிக்கடி மனைவி ஜமுனாவிடம் தகராறு செய்து வந்தார். தவிர, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலையிலே மது குடித்த முத்துராஜூக்கு மனைவி மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் மனைவியை கொலை செய்ய முடிவெடுத்தார்.

படித்துக் கொண்டிருந்த தனது மகளை சிறிது நேரம் வீட்டில் இருந்து வெளியில் செல்லுமாறு கூறிய முத்து ராஜ், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி ஜமுனாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ஜமுனா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அதன் பிறகும் ஆத்திரம் தீராத முத்துராஜ் மனைவி ஜமுனாவின் தலையை துண்டாக வெட்டி எடுத்து தெருவில் நடந்து சென்றார்.

இதைத் பார்த்த ஊர்மக்கள் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் முத்துராஜ் எந்த பதட்டமும் இல்லாமல் மனைவியின் தலையை ஊருக்கு வெளியே உள்ள கோவில் முன்பு வைத்துவிட்டு சீதபற்பநல்லூர் பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் ரத்தவெள்ளத்தில் தலையின்றி கிடந்த ஜமுனாவின் உடலை கைப்பற்றினர்.

நடத்தை சந்தேகத்தால் பெண் ஒருவர் அவரது கணவரால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.