199 நாட்டின் விவரங்களை மனப்பாடமாக கூறும் 1ம் வகுப்பு மாணவன்!!

610

boy

திருப்பதியில் 199 நாடுகளின் விவரங்களை மனப்பாடமாக கூறும் 1ம் வகுப்பு மாணவனுக்கு யுனிக் என்ற உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதியை அடுத்த திருச்சானூரைச் சேர்ந்தவர் ரமேஷ் – ஹேமலதா என்ற தம்பதியரின் மகன் அனுருத் வர்ஷன். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில், இந்த சிறுவன் 199 நாடுகளின் பெயர்கள் ,தலைநகரம், கொடி மற்றும் முக்கிய நகரங்களின் பெயர்கள் உள்ளிட்ட பல விவரங்களை மனப்பாடமாக கூறுகிறான்.

இதைத் தொடர்ந்து, சிறுவனின் இந்த அற்புத மனப்பாட திறமைக்கு மரியாதை வழங்கும் விதத்தில் இவனுக்கு யுனிக் உலக சாதனை அறிவிக்கப்பட்டது.

இதன்படி, நேற்று விருது வழங்கும் நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், லயன்ஸ் கிளப் மண்டல இயக்குனர் சுதா ராணி விருது மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கி சிறுவன் அனுருத் வர்ஷனை பாராட்டி பேசியுள்ளார்.

மேலும், உலக சாதனை படைத்த மாணவனை பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளும் பாராட்டியுள்ளனர்.