இப்படியும் ஒரு பாலமா? ஆற்றின் குறுக்கே அந்தரத்தில் அவலப் பயணம்!!

633

bridge

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் ஒற்றை கயிற்றில் அந்தரத்தில் பயணம் செய்யும் அவலநிலை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா மாவட்டத்தின் கிராமத்தின் ஒரு பகுதியில் ஓடும் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் ஆற்றை கடப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஆற்றைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கிராம மக்களே தங்கள் முயற்சியில் ஆற்றின் இரு கரைகளில் உள்ள மரங்களின் குறுக்கே ஒற்றைக் கயிற்றைக் கட்டி தாற்காலிக பாலம் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், மிகவும் ஆபத்தான நிலையில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட அனைவரும் மரத்தின் மீது ஏறி ஒற்றைக் கயிற்றிலியே பயணித்து ஆற்றின் மறுபக்கத்திற்கு செல்கின்றனர். இதனால் அங்கு பாலம் கட்ட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.