தீக்குளிக்கப் போவதை முன்னரே சமூக வலைதளத்தில் வெளியிட்ட விக்னேஷ்!!

812

1

சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பேரணியின் போது தீக்குளித்து உயிரிழந்த அக்கட்சியின் தொண்டர் விக்னேஷ் நேற்று முன்தினமே தனது தற்கொலை முயற்சி பற்றி சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை எழும்பூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பேரணி நடைபெற்றது.

ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து புறப்பட்ட பேரணி எழும்பூரில் முடிவடைய இருந்தது. புதுப்பேட்டை அருகே பேரணி வந்து கொண்டிருந்தபோது விக்னேஷ்குமார் தீக்குளிக்க முயன்றார்.

உடனடியாக அருகில் இருந்த கட்சியினர் தண்ணீர் மற்றும் வேப்பம் இலை கொண்டும் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விக்னேஷ்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்நிலையில் அவர் நேற்றே தனது தற்கொலை முயற்சி பற்றி சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், நாளை நடைபெறும் போராட்டத்தில் தற்கொலை போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

ஊடகங்கள் தங்கள் டி.ஆர்.பி ரேட்டை உயர்த்திக் கொள்ள பேரணியை நேரடியாக ஒளிபரப்புச் செய்ய வேண்டுகிறேன்.

அப்போதாவது மானத் தமிழ் இனம் கொதித் தெழட்டும். மாணவர் போராட்டம் இம்மண்ணில் வெடிக்கட்டும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார். இதே போல் அவர் கைப்பட எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

2 3