ஓர் மனிதனை இன்னொரு மனிதன் கொன்று சாப்பிட முடியுமா?

411

man

அட என்னடா இப்படியான கேள்வியை கேட்கிறான் என்று பதிவை பார்க்காமல் போய்விடாதீர்கள் கொஞ்சம் வாசித்துதான் பாருங்களேன்.

இவ்வாறான செயல்கள் மனிதனால் முடியாவிட்டாலும் தான் மனிதன் என்ற மனநிலையில் இல்லாத அரக்கர்கள் செய்யும் வேலையாக கூட கூறமுடியும்.

இவ்வாறான விலங்குகளை தன்னின உயிருண்ணி (கானிபாலிசம்) என்ற விஞ்ஞான பெயரால் அழைக்கலாம்.

அதாவது ஒர் இனத்தை சேர்ந்த உயிரினம் அதே இனத்தை சேர்ந்த இன்னொரு உயிரியை கொன்று உண்டு உயிர் வாழ்பவைகள் என கூறலாம்.

இதற்கான எளிய ஊதாரணமாக நாம் சில பாம்பு வகைகளை கூறலாம் சில பாம்புகள் தன் இனத்தை தானே சாப்பிடும்.

ஆதிகால மனிதர்கள் இதுபோல் மனிதர்களை வேட்டையாடி உண்ட வழக்கம் இருந்தது. இவர்களை இரண்டாக வகைபடுத்தலாம்.

தன் பிரிவைச்சார்ந்த மனிதர்களை உண்பவர்கள் (என்டோ கானிபாலிசம்)
வெளிப்பிரிவைச் சார்ந்த மனிதர்களை உண்பவர்கள் (எக்டோ கானிபாலிசம்)
மேலும் உணவுக்காக ஒர் உயிருள்ள மனிதனை கொள்பவர்களை மனிதக் கொலை தன்னின உயிர் உண்ணி. (ஹோமிசைட் கானிபாலிசம்)என்றும், உணவுக்காக முன்பே இறந்த மனிதனை உண்ணும் உயிர் உண்ணி (நெக்ரோ கானிபாலிசம்)என்றும் கூறுவார்கள்.

இவ்வாறான நரமாமிச விரும்பிகள் பற்றி முதன் முதலாக அறிவியல் பூர்வமாக மக்கள் நம்பத் தொடங்கியது,

1979ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஆவணப்படம் (Documentary) தயாரிக்கும் மூவர் அடங்கிய குழுவினர் அமெரிக்க கண்டத்தின் அமேசன் காடுகளை நோக்கி, இவ்வாறான நரமாமிச விரும்பிகள் பற்றி அறிவதற்காக சென்றார்கள்.

ஆனால் இவர்கள் அனைவருமே அந்த ஆதிவாசிகளால் வேட்டையாடப்பட்டு உணவாக உட்கொள்ளப்பட்டார்கள்.

அமேசன் காடுகளில் உள்ள “யக்குமோ” கிராமத்தைச் சென்றடைந்த இந்த விவரணப் படத் தயாரிப்பாளர்களை காணவில்லை என அறிந்து தேடிச் சென்றவர்களினால் கைப்பற்றப்பட்ட வீடியோ நாடாக்கள் மூலம் இந்த மூவரும் காட்டு வாசிகளால் கோராமாக கொலை செய்யப்பட்டு உணவாக உட்கொள்ளப்பட்டமை வெளி உலகிற்கு தெரியவந்தது.

அதன் பின் கைப்பற்றப்பட்ட வீடியோ பிரதிகளின் உதவியுடன் ஒரு விவரணப் படமாக இந்தக் காட்டு வாசிகளைப் பற்றிய படம் 1980ம் ஆண்டு Cannibal Holocaust எனும் பெயரில் வெளியிடப்பட்டது.

இப் படத்தில் வன்முறைக் காட்சிகள், கொடூரமான துன்புறுத்தல் காட்சிகள் இருந்த காரணத்தால் உலகில் அதிகமான நாடுகளினால் இப்படம் திரையிட அனுமதியேதுமின்றி தடைசெய்யப்பட்டிருந்தது.

இருந்தும் இது பற்றி புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் இருக்கின்றதா? என தேடுதல் வேட்டை நடத்தினால் “சிறுத் தொண்டர் நாயனார் தனது மகனை இறைவனுக்கு கறியாக்கி வழங்கியதாக” பெரியபுராணம் கூறுகின்றது.