இந்தியாவில் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு பெண் ஒருவர் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் லட்சுமி யாதவ். இவர் இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி.
படிப்பில் கெட்டிகாரரான இவர் M.Phil என்ற முதுநிலை பட்டத்தை தத்துவத்திலும், LLM என்ற முதுநிலை பட்டம் என இரண்டு பட்ட படிப்பை முடித்த பட்டதாரி ஆவார்.
இந்நிலையில் மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலையில் 3 சதவீத ஒதுக்கீடு என்ற அரசின் அறிவிப்பை நம்பி அந்த வேலைக்காக பல நாட்களாக காத்திருக்கிறார். அவர் எதிர்பார்க்கும் அரசு வேலை அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்
அதில், நான் எதிர்பார்க்கும் அரசு வேலை எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. நான் வாழ தான் வழி இல்லை, நான் என் உயிரை மாய்த்து சாவதற்காவது எனக்கு அனுமதி தாருங்கள் என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதே கடிதத்தை தன் சொந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சவுகானுக்கும் அவர் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.







