பார்ப்போரை பிரமிக்கவைக்கும் சிறுமி : பலருக்கு இவர் எடுத்துக்காட்டு!!

849

girl

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒராய் ரயில் நிலையத்துக்கு தினமும் மாலை சென்றால் ஒரு பள்ளி சிறுமி அங்குள்ள விளக்கு வெளிச்சத்தில் படித்து கொண்டும், எழுதி கொண்டும் இருக்கும் காட்சியை காணலாம்.

அந்த சிறுமியின் பெயர் திவ்யா, அந்த ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு வீட்டில் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

அவர்கள் வீட்டில் மின்சார வசதியே கிடையாது. இந்த கடினமான சூழ்நிலையிலும் அவர் கல்வி படிப்பு மீது வைத்துள்ள பற்று மிக பெரியதாக இருக்கிறது.

வீட்டில் மின்சாரம் இல்லை என்பதால் மாலை சூரிய வெளிச்சம் குறைந்தவுடன் ரயில் நிலையத்துக்கு அந்த சிறுமி வந்து விடுகிறார்.

அங்கு டிக்கெட் கவுண்டர் அருகில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் தன் வீட்டு பாடங்களை எழுதுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்தியா 70வது சுதந்திர தின விழாவை நாம் கொண்டாடி வரும் வேளையில் இன்னும் இவரை போல பல திவ்யாக்கள் நாடு முழுவதும் அடிப்படை வசதிகள் இன்றி, தரமான கல்வியை பெறமுடியாமல் தவித்து வருகிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.