ராஜஸ்தானில் பிடிபட்ட மலைப் பாம்புடன் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் அப்பாம்பால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அரவல்லி ரேன்ச் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை மலைப்பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டது.
இதனால் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்மை உயிருடன் பிடித்து மற்றொரு இடத்தில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மவுண்ட் அபு என்ற இளைஞன் பிடிபட்ட மலைப்பாம்புடன் செல்பி எடுக்க முற்பட்டு, பாம்பின் அருகே சென்ற போது, திடீரென பாம்பு அவரை கடிக்க முற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அது அவரது தோள்பட்டையை தாக்கியது.






