தெலுங்கு திரையுலகை அலங்கரிக்கப் போகும் கமல்-சூர்யா!!

354

kamal

டொலிவுட்டில் 1980களிலும், 1990 முற்பகுதியிலும் கமல் ஹாசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. குறிப்பாக, சாகரா சங்கமம், ஸ்வாதி முத்யம் மற்றும் இந்துருடு சந்துருடு உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தெலுங்கில் மீண்டும் களமிறங்க உள்ளார். இதற்காக, ஜெய் போல் தெலுங்கானா என்ற வெற்றிப் படத்தை இயக்கிய ஷங்கருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கமல்.

ஷங்கர் தனது அடுத்த படத்தின் கதைக்கருவைவும், கதாபாத்திரத்தையும் கமலிடம் கூறியிருக்கிறார். இதில் திருப்தியடைந்த கமல் நடிக்க ஒப்புக் கொண்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, உலக நாயகன் மீண்டும் டோலிவுட்டில் மின்னப்போகிறார்.

இதேபோல் ஏராளமான தெலுங்கு ரசிகர்களை வசியப்படுத்தியுள்ள சூர்யா நேரடியாக தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளார். பூரி ஜெகனாத்தின் பிசினஸ்மேன் பட வாய்ப்பை இழந்ததால் அதிருப்தியில் இருந்த சூர்யா விரைவில் அவருடன் கைகோர்க்க இருக்கிறார்.

இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறும் சூர்யா, படத்தைப்பற்றிய மேற்கொண்டு விவரங்களை தெரிவிக்கவில்லை. இவர்களின் கூட்டணியில் உருவாகும் படம் வெளியான பின்னர், சூர்யாவின் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கலாம்.

கோலிவுட் நட்சத்திர நாயகர்கள் தெலுங்கு சினிமாவின் பக்கம் பார்வையை செலுத்தும் அதேசமயம் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவாக திகழும் கோபி சந்த் கோலிவுட்டுக்கு விஜயம் செய்துள்ளார். அவர் தற்போது நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

கலைக்கும் பொழுதுபோக்கிற்கும் மொழி ஒரு தடையல்ல என்கிறார்கள் இந்த நட்சத்திரங்கள்.