தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்த செய்தியே.
இவரைப்பற்றி வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒருபக்கம் கட்சி தொண்டர்கள் அவருக்காக பூஜைகள், வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். இவர்கள் எல்லாம் சுயலாபமோ, அதீத பாசத்துக்காகவே தாங்களாகவே முன்வந்து இதை சில வேண்டுதல்களை செய்கின்றனர்.
ஆனால் ஏதும் அறியா சின்னக் குழந்தைகளுக்கு கன்னத்தில் வேல் குத்தி தலைவி வாழ்க என்று வேண்டுதல்கள் நிறைவேற்ற வைக்கின்றனர்.
இதை தானாக விரும்பி ஏற்கும் வயதில்லாத இந்த குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை சரியா என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதே சமூக வலைதளவாசிகளின் கருத்து.







