புகையிரத நிலையத்தில் பாடசாலை மாணவனை வெட்டிய மர்ம நபர்கள்!!

514

station

இந்தியாவில் தமிழகத்தில் சென்னை கோட்டூர்புரம் புகையிரத நிலையத்தில் இளைஞன் ஒருவர் தனது தோழியுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். இந்நிலையில் அங்கு கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அந்த பெண்ணை மிரட்டி விரட்டியுள்ளனர்.

பின்னர் குறித்த இளைஞனை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். படுகாயமடைந்த இளைஞனை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் இளைஞனை வெட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வெட்டப்பட்ட இளைஞன் பாடசாலை மாணவன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.