தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலகுறைவு காரணமாக கடந்த பத்து நாட்களாக சென்னை அப்பலோ மருத்துவனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் குணமடைந்து வருவதாகவும் இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்றும் முதல்வருக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது.
ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பல்வேறு விதமான பூஜைகளும், பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் அதிமுகவின் தீவிர விசுவாசி ஒருவர் முதல்வர் நலம் பெற வேண்டி முதுகில் அலகு குத்தி பறவை காவடி எடுத்து வேண்டியுள்ளார். இந்த காட்சி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கும் விதத்தில் அமைந்திருந்தது.







