இந்திய பொலிஸாரால் புறா கைது : நரேந்திர மோடியை எச்சரிக்கும் குறிப்பை சுமந்து சென்றதாக தெரிவிப்பு!!

678

pigeon-arrested

புறா­வொன்றை தாம் கைது செய்­துள்­ள­தாக இந்­திய பொலிஸார் நேற்று தெரி­வித்­துள்­ளனர். இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடிக்கு எச்­ச­ரிக்கை விடுக்கும் குறிப்­பொன்றை இப்­புறா சுமந்து சென்­ற­மையே இதற்குக் காரணம்.

பஞ்சாப் மாநி­லத்தில் பாகிஸ்தான் எல்­லைக்கு அரு­கி­லுள்ள பதான்கோட் நகரில் இப்­பு­றாவை இந்­திய எல்லைக் காவல் படை­யினர் ஞாயி­றன்று மாலை கண்­டு­பி­டித்­தனர் என பதான் கோட் பொலிஸ் இன்ஸ்­பெக்டர் ராகேஷ் குமார் நேற்று தெரி­வித்­துள்ளார்.

இப்­புறா சுமந்து சென்ற குறிப்பில் “மோடி, நாம் 1971 இல் இருந்­த­வர்­களைப் போன்­ற­வர்­களல்ல. இப்­போது, ஒவ்­வொரு குழந்­தையும் இந்­தி­யா­வுக்கு எதி­ராக போரா­டு­வ­தற்குத் தயா­ராக இருக்­கி­றது” என உருது மொழியில் எழு­தப்­பட்­டி­ருந்­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

1971 ஆம் ஆண்டில் இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் இறு­தி­யாக முழு அள­வி­லான போர் நடை­பெற்­றது.

அப்­போரில் கிழக்குப் பாகிஸ்­தா­னி­லி­ருந்த இலட்­சக்­க­ணக்­கான பாகிஸ்தான் படை­யினர் சர­ண­டைந்­த­துடன், கிழக்குப் பாகிஸ்தான் ஆனது பங்­க­ளாதேஷ் எனும் சுதந்­திர நாடா­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

“இந்த எச்­ச­ரிக்கைக் குறிப்­பா­னது பாகிஸ்­தானைத் தள­மாகக் கொண்ட லக் ஷர் ஈ தெய்பா எனும் ஆயுதக் குழு­வினால் கையெ­ழுத்­தி­டப்­பட்­டுள்­ள­தாக தென்­ப­டு­கி­றது. எனவே நாம் இவ்­வி­டயம் தொடர்பில் தீவி­ர­மாக விசா­ரணை செய்­கிறோம்” எனவும் இன்ஸ்­பெக்டர் ராகேஷ் குமார் தெரி­வித்­துள்ளார்.

கடந்த வருடம் பாகிஸ்தான் புல­னாய்வுத் துறை­யி­னரால் பறக்க விடப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­பட்ட புறா­வொன்றை இந்­திய பொலிஸார் கைப்­பற்­றி­ய­துடன், அப்­பு­றா­வுக்குள் உளவு கெமரா இருக்­கலாம் என்ற சந்­தே­கத்தில் எக்ஸ் ரே சோத­னையும் நடத்­தப்­பட்­டது.

2013 ஆம் ஆண்டில் சிறிய கெமராவொன்று பொருத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த வல்லூறு ஒன்றை இந்திய பாதூகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.