வீட்டுப்பாடம் செய்யாத மாணவியை பேனாவால் கண்ணில் குத்திய ஆசிரியர் : சிறுமி பார்வையை இழக்கும் அபாயம்!!

658

torcher

வீட்டுப்பாடம் செய்யாததால் பேனாவால் மாணவி கண்ணை குத்திய ஆசிரியரால் சிறுமி பார்வையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம் காங்கிரிக்கு அருகில் உள்ள பி.சி பள்ளி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் செப்டம்பர் 14ம் திகதி வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி ஆசிரியர் பி. ஸ்ரீனிவாச ரெட்டி, மாணவியை பார்த்து ஏன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசிரியரின் கேள்விக்கு தேசரி சனிகா சரியாக பதிலளிக்காத காரணத்தினால் பேனாவை கொண்டு சிறுமியின் கண்ணை குத்தியதாக தெரிகிறது. இதனால் மாணவி கண்ணை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் பி.வி.சாகர் கூறியதாவது, முயற்சியாக ஆசிரியர், பேனாவை சனிகாவின் கண்களுக்கு அருகே கொண்டு சென்றுள்ளார். இதனால் சனிகாவின் இடது கண் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், சிறுமியின் கண்களும், எதிர்காலமும் இருண்டு விடுமோ என்ற அச்சத்துடன் இருக்கிறது. இதனால், சைல்ட்லைன் இந்தியா அறக்கட்டளை உதவியுடன் சிறுமி சனிகாவின் பெற்றோர் இழப்பீடு கோரி திங்கள் கிழமை மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தை அணுகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்த ஆணையத்தின் செயலாளர் ராஜா வெங்கடாத்ரி, ஆசிரியர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதோடு, சிறுமி தாழ்த்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர் என்பதால், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.

மேலும், பி.சி.பள்ளி காவல்துறை தலைமறைவாக இருக்கும் ஆசிரியரைத் தேடிக் கண்டுபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.