மஹாராஷ்டிராவில் தாண்டியா நடனம் ஆடியதை பெற்றோர்கள் கண்டித்ததால் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் பசீர் சேக். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் சானியா என்ற மகள் உள்ளார்.
பசீர்சேக் பகுதியில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தாண்டிய நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தாண்டிய நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சானிய பெற்றோர்களிடம் அனுமதி கேட்காமல் நடனம் ஆடியுள்ளார்.
இதைக் கண்ட அவரின் தந்தை தாண்டிய நடனம் ஆடியது குறித்து சானியாவை சில தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சானிய தான் வசிக்கும் வீட்டின் ஆறாவது மாடியில் இருந்து திடீரென குதித்துள்ளார். இதைக் கண்ட அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






