நேற்றிரவு வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றிக்கு அமைய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த கோகுலதாசன் அபிசிகன்195 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழியில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இதேவேளை பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்தறை மெதடிஸ்ட் கல்லூரியில் பயிலும் மாணவன் திஜா நிரன் சமரவிக்ரம 196 புள்ளிகளை பெற்று தேசிய மட்டத்தில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
குளியாப்பிட்டிய அஸ்ஸெத்தும சுபாரதி பாடசாலையில் மாணவி ருவன்யா மெத்மி குணசேகர என்ற மாணவி 195 புள்ளிகளை பெற்று அபிசிகனுடன் இரண்டாமிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று, அகில இலங்கை மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், தமிழ் மொழி மூலமான மாணவர்களில் முதலாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
அபிசிகனின் தந்தையான கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களாவர்.
அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அபிசிகனை வவுனியா நெற் தொடர்புகொண்டபோது, தான் இந்த பெறுபேற்றினை பெற்றுகொள்ள தனக்கு வழிகாட்டியாக செயற்பட்ட ஆசிரியர்களுக்கும், பெற்றோர் மற்றும் சகோதரனுக்கும் தன்னுடன் பரீட்சையில் தோற்றிய சக வகுப்பு தோழர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து இந்த சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
அகில இலங்கை நீதியில் முதலிடம் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமைசேர்த்த இவருக்கு வவுனியா நெற் வாசர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தொடர்புபட்ட செய்திகள் : வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவன் 195 புள்ளிகளைப்பெற்று வடமாகாணத்தில் முதலிடம்!!
வவுனியா மாணவன் மாகாண ரீதியில் முதலிடம் : முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாணவர் விபரம்!!













