நடிகைக்கு இரத்தம் வர அடித்துப் பழிவாங்கினாரா கமல்?

222

kamal

கார்த்திகா என்ற நாயகியை இரத்தம் வர அடித்து பழிவாங்கியவர் கமல் ஹாசன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி.

கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் அவரது மகளாக மலையாள நடிகை கார்த்திகா நடித்திருந்தார். இப்படத்தின் போட்டோஷுட்டின் போது, கமல் ஹாசன் அவர் தோளில் கை போட்டுள்ளார். இது கார்த்திகாவிற்குப் பிடிக்காததால் கமலின் கையைத் தட்டியுள்ளார். அதோடு என்னை யாரும் தொட்டு நடிப்பது பிடிக்காது என்று முகத்தில் அடித்தது போன்று கமலிடம் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், படத்தில் கமல் கார்த்திகாவை கன்னத்தில் அறைவது போல் ஒரு காட்சி. ஆனால் பழைய விடயத்தை மனதில் வைத்துக்கொண்டு கார்த்திகாவை ஓங்கி அறைந்தார். இதனால் கார்த்திகாவின் காதில் இருந்து இரத்தம் வந்தது.

கமல்ஹாசனின் இந்த செயலால் தான் கார்த்திகா தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்ததார், என பெல்லிசேரி நேர்காணலொன்றில் கூறியுள்ளார்.