பிரபல நடிகையின் செயலை பாராட்டிய ரசிகர்கள்!!

224

anusree

விமான நிலைய உணவகத்தின் விலைப் பட்டியலை பிரபல நடிகை அனுஸ்ரீ பேஸ்புக்கில் வெளியிட்ட தகவலை தொடர்ந்து மனித உரிமை ஆணையம் விமான நிலைய இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு தனது தோழியுடன் சென்ற பிரபல மலையாள நடிகை அனுஸ்ரீ அங்கு காபி மற்றும் சிக்கன் பப்ஸ் சாப்பிட்டுள்ளார்.

இதற்கான பில்லை அவர் கொடுக்கும் போது ரூ.680க்கு பில் வந்திருந்தது. 2 சிக்கன் பப்சின் விலை ரூ.500, காபி ரூ.100, பால் இல்லாத காபி ரூ.80 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வளவு அதிகமாக பில் வரும் என்று எதிர்பார்க்காத அனுஸ்ரீ அதிர்ச்சியடைந்ததார்.

இது குறித்து ஊழியர்களிடம் அவர் விளக்கம் கேட்ட போதும் யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை.

இதனால் அந்த விலை பட்டியலை பேஸ்புக்கில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை நடிகை அனுஸ்ரீ வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும், இதைப் பார்த்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த செபின் என்பவர் இது பற்றி மனித உரிமை ஆணையத்தில் புகாரும் செய்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து மனித உரிமை ஆணையம் விமான நிலைய இயக்குநர், உணவக மேலாளர் மற்றும் நுகர்வோர் துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.