ஈராக்கில் இரண்டு ஷியா குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பதினாறு பேரை துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொன்றதுடன், அருகருகே இருந்த அக்குடும்பங்களின் வீடுகளையும் அவர்கள் வெடிவைத்து தகர்த்துள்ளனர்.
பாக்தாத்துக்கு தெற்கே லதீஃபியா என்ற நகரில் நேற்றிரவு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சகோதரர்கள் இருவரின் வீடுகளை இலக்குவைத்து நடந்த தாக்குதலில் இறந்தவர்களில் ஆறு பேர் குழந்தைகளும் ஐந்து பேர் பெண்களும் ஆவர்.
கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கிதாரிகள் சுட்டுத் தள்ளியதாக உயிர் பிழைத்தவர் ஒருவர் கூறுகிறார்.