ஹெரோயினை விடவும் அதிகளவானோரை பலியெடுக்கும் அபாயகரமான வலிநீக்கி மருந்து!!

371


siddha1

பிரித்­தா­னி­யாவில் வலிநீக்கி மருந்­தான திர­மடோல், ஹெரோயின் போதைப்­பொ­ருளை விடவும் அதி­க­ள­வா­னோரின் உயிரை பலி­கொண்டு வரு­வ­தாக அந்­நாட்டு முன்­னணி நோயியல் நிபுணர் ஒருவர் தெரி­விக்­கிறார்.



அந்த வலி நீக்கி மருந்தை மருத்­து­வரின் சிபா­ரி­சுக்­க­மை­யவே வழங்க வலி­யு­றுத்­தப்­பட்­டுள்ள போதும் கறுப்புச் சந்தை மூல­மாக அந்த மருந்தை சட்­ட­வி­ரோ­த­மாக பெறு­வது அதி­க­ரித்து வரு­வ­தாக வட அயர்­லாந்தைச் சேர்ந்த நோயியல் நிபு­ண­ரான பேரா­சி­ரியர் ஜக் கிரேன் கூறினார்.

கடு­மை­யான வலி­களைத் தணி­விக்கும் இந்த மருந்­துக்கு பலரும் அடி­மை­யா­கி­யுள்­ள­தாக தெரி­வித்த அவர், அந்த மருந்தை ஏனைய மருந்­து­க­ளுடன் அல்­லது மது­பா­னத்­துடன் கலந்து பயன்­ப­டுத்தும் போது அது பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக அவர் கூறினார்.



வட அயர்­லாந்தில் கடந்த வருடத்தில் மட்டும் அந்த மருந்து பாவ­னையால் 16 வயது சிறுமி மற்றும் 70 வயது வயோதிபர் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர்.