திருமணத்துக்குப் பின்னர் ஆண்கள் செய்யக் கூடாத விடயங்கள்!!

343


girl

திருமணம் முடிந்ததும் ஒரு குடும்பத்தை நிர்ணயிக்கும் பொறுப்புகள் அனைத்தும் ஆண்களைச் சார்ந்தது. எனவே கணவன் அவர்களின் மனைவிக்கு பிடித்தது போல ஒருசில விடயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.



இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரிவுகள் மற்றும் சண்டைகளை தவிர்த்து, எப்போதுமே சந்தோஷமாக இருக்க முடியும்.

திருமணத்திற்கு பின் ஆண்கள் செய்யக் கூடாதவை



திருமணம் முடிந்த ஆண்கள், வீட்டில் மனைவியுடன் இருக்கும் போது, அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது உங்களுடைய கண்கள் மற்றும் மூளையின் செயல்திறனை அதிகமாக பாதிப்பதுடன் உங்கள் மனைவியின் கோபத்திற்கு ஆளாகுவீர்கள்.



திருமணம் முடிந்து நம் வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை சம்பாதிப்பது தவறில்லை. ஆனால் ஓவர் டைம் என்று கடுமையாக உழைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் மனைவியுடன் அதிக நேரம் இருக்க முடியாமல் போய்விடும்.


பொதுவாக இரவு வேளைகளில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் பெருமளவில் உடல் எடை அதிகரிக்க செய்யும். ஏனெனில் எந்தவொரு மனைவியும், தனது கணவனின் உடல் எடை அதிகரிப்பதை விரும்ப மாட்டாள்.

திருமணதிற்கு பிறகு நைட் ஷோ போவதை பெண்கள் விரும்ப மாட்டார்கள். அதிலும் நீங்கள் உங்கள் உடன் பணிபுரியும் நபர்களுடன் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


திருமணம் முடிந்த ஆண்கள் பார்ட்டி என்ற பெயரில் நண்பர்களுடன் சென்று குடித்துவிட்டு இரவு நேரங்களில் வீட்டிற்கு வருவதை பெண்கள் விரும்பமாட்டார்கள், இதனால் குடும்பத்தில் அதிக சண்டை சச்சரவுகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.