அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பாரிய கரடியொன்றை தமது வீட்டில் வைத்து வளர்க்கின்றனர்.
சுமார் 1,500 இறாத்தல் (680 கிலோகிராம்) எடை கொண்டதாக இந்த கரடி உள்ளது. எனினும், இக் கரடியுடன் இவர்கள் கொஞ்சி விளையாடுகின்றனர்.
இவ்வாறு கரடிகளுடன் பழகுவது ஆபத்தானது. ஆனால், கொவால் ஸ்க் என்பவரும் அவரின் மனைவி சுசானும் 23 வருடங்களாக இக் கரடியை வளர்த்து வருகின்றனராம்.
நியூயோர்க்கிலுள்ள காயமடைந்த மற்றும் கைவிடப்பட்ட மிருகங்களுக்காக இத் தம்பதியினர் நடத்தும் காப்பகத்துக்கு, போத்தலில் பால் குடிக்கும் குட்டியாக இக்கரடி கொண்டுவரப்பட்டபோது கொவால்ஸ்க் அதனை முதன்முதலில் கண்டார்.
அதன்பின் அக் கரடிக் குட்டியை அவர் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்தார். “உங்களுக்கு நேரம் இருந்தால், நாள் முழுவதும் அதனுடன் விளையாடலாம்.
அதிஷ்டவசமாக இந்த கரடி தனது எடையை மற்றவர்கள் மீது பிரயோகிப்பதில்லை. உங்கள் மீது அது சரிந்தால் பிரச்சினை ஏற்படலாம்” என கொவால் ஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த கரடிக்கு ஜம்போ என பெயரிடப்பட்டுள்ளது. தவிர, மேலும் 10 கரடிகளையும் இத் தம்பதியினர் தமது வீட்டில் வளர்க்கின்றனர். இவை தவிர காயமடைந்த வாத்துகள், மான் போன்றவற்றுக்கும் இவர்கள் புனர் வாழ்வளித்துள்ளனர்.