கொழும்பு மதுரைக்கிடையில் புதிய விமான சேவை!!

442

sla

கொழும்பு மற்றும் மதுரைக்கு இடையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தினசரி விமானத்தை இயக்கவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் மதுரைக்கு இடையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக கொழும்பு மற்றும் மதுரைக்கு இடையில் இயங்கிய மிஹின் லங்கா எயார்லைன்ஸ் விமான சேவை நாளையுடன் தனது சேவையை நிறுத்தவுள்ளது.

இந்நிலையிலேயே, எதிர்வரும் 30ம் திகதி முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தினமும் மதுரையிலிருந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பிலிருந்து மதியம் 2.10க்கு புறப்பட்டு மதுரைக்கு மதியம் 3.10க்கு வந்து சேரும். பின்னர் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கொழும்பை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.