சென்னை 11 மாடிக் கட்டிடம் இடிப்பு : பரபரப்பான இறுதி 3 வினாடிகள்!!

664

building

சென்னை மவுலிவாக்கத்தில் 61 பேரை பலி வாங்கிய 11 மாடி கட்டடத்தை உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி 3 வினாடிகளில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு யூன் மாதம் 28 ஆம் திகதி சென்னையில் பெய்த கனமழை காரணமாக மவுலிவக்கம் பகுதியில் புதிதாய் கட்டப்பட்டுவந்த 11 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அப்போது கட்டிட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதே போன்று அருகில் இருந்த 11 மாடி கட்டிடமும் உறுதியான நிலையில் இல்லாத காரணத்தினால், கட்டிடத்தை இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.

அதன் காரணமாக இன்று அக்கட்டிடம் தரைமட்டமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கட்டடத்தை சுற்றியுள்ள 100 மீற்றர் சுற்றளவிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் அப்பகுதியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் அக்கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் ஐந்தாவது தளத்தில் உள்ள தூண்களில் துளைகள் போடப்பட்டு மொத்தம் 162 தூண்களில் வெடி மருந்துகள் நிரப்பி கட்டிடத்தை இடிக்க தயாராகியதாகவும், அதைத் தொடர்ந்து அப்பகுதியில் காலை முதலே மின்சாரம் தடைசெய்யப்பட்டிருந்தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் கட்டிடம் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென பெய்த மழை காரணமாக இன்று மலை 6.50 மணியளவில் கட்டிடம் வெடி பொருட்கள் மூலம் 3 விநாடிகளில் தரைமட்டமானது. இந்த தகர்ப்பு ரிமோட் கண்ட்ரோல் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதனால் அப்பகுதியில் சற்று மிதமான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் தமிழகத்தில் மிகப்பெரிய கட்டிட தகர்ப்பு இது என்றும் கூறப்படுகிறது.

மேலும் இதற்கு மட்டும் 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அக்கட்டிடம் தகர்க்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உலா வரத் தொடங்கியுள்ளது.