அவர் என்ன புனிதரா : ரஜினியை வம்புகிழுத்த சீமான்!!

598

rajani

காவிரி பிரச்சனையில் மெளனம் காத்துவிட்டு, தற்போது ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட விடயத்தில் மோடியை புகழ்வதால் நடிகர் ரஜினிகாந்த் புனிதராகி விட முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதை பற்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை கூறி வரும் நிலையில், இது பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டிருப்பது அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தான்.

வங்கி வாசலில் எந்தப் பணக்காரராவது நிற்கிறாரா? ரூபாய்த் தாளை ஒழித்துவிட்டால், லஞ்சம் ஒழிந்துவிடுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை பாஜக அரசு அமைக்காததை பற்றி பேசாத நடிகர் ரஜினிகாந்த் மோடிக்கு நன்றி சொல்லி புதிய இந்தியா உருவாகி விட்டது என மகிழ்வது ஏன்? மற்றும் பல நடிகர்கள் இந்த விடயத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

வரி ஏய்க்காமல் இவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என கூற தைரியமில்லாத ரஜினிகாந்த் உட்பட எல்லா நடிகர்களும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் புனிதர்கள் ஆகி விடுவார்களா என சீமான் வினவியுள்ளார்.