திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் காதலனுடன் ஓட்டம் : அதிர்ச்சியில் கணவன்!!

294

couples

தமிழ்நாட்டின் குடியாத்தம் பகுதியில் திருமணமான 4 நாட்களில் கணவனை பிரிந்து, காதலனை 2 வது திருமணம் செய்து கொண்ட பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம் புவனேஷ்வரிபேட்டை பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரது மகள் துர்கா(21). இவருக்கும், பிச்சணூர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கும் கடந்த 2ம் திகதி திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து மறுவிருந்துக்காக புதுமண தம்பதிகள் 6ம் திகதி துர்காவின் வீட்டுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் தோழிகள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற துர்கா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் மிகுந்த பதற்றமடைந்த துர்காவின் கணவரும், பெற்றோரும் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்ற பொலிசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதில் துர்காவும், குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை தண்டபாணி கோவில் தெருவை சேர்ந்த காசிலிங்கம் மகன் கேசவன்(24) என்பவரும் காதலித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் காதலை மறக்க முடியாத துர்கா, வீட்டை விட்டு வெளியேறி காதலனை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

தங்களை தேடுவதை தெரிந்து கொண்ட துர்கா, கேசவனுடன் குடியாத்தம் வந்துள்ளார்.

இவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்ற பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர், தனது காதலனுடனே வாழ விரும்புவதாக துர்கா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இவர்களை பொலிசார் குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.