பெப்ச்சிக்கு பதிலாக மண்ணெய்யை குடித்த குழந்தைக்கு நடந்த விபரீதம்!!

704

pepsi

கடலூர் மாவட்டத்தில் பெப்சி என நினைத்து மண்ணெண்யையை குடித்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளது.

தனம்- கோவிந்தராஜ் தம்பதியினர் தாங்கள் வாங்கும் குளிர்பான பாட்டில்கள் தீர்ந்தவுடன் அதனுள், மண்ணெண்ணெய் மற்றும் எறும்பு பொடிகளை போட்டு வைப்பது வழக்கம்.

இந்நிலையில் இவர்களது 2 வயது குழந்தை ஹரிராமன், அந்த பாட்டிலுள் இருப்பது பெப்சி என நினைத்து குடித்துள்ளது.

சிறிது நேரத்தில் குழந்தை திடீரென மயங்கி விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அருகில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலையும் பார்த்துள்ளனர்.

உடனடியாக திட்டக்குடி அரசு மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்பதால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை உயிர் பிழைத்தது.