தலைமுடியில் பாதியை எடுத்து போராட்டம் நடத்திய முதியவர் : காரணம் என்ன?

901

old-man

பிரதமர் பதவியில் இருந்து மோடி பதவி விலகும்வரை, தனது தலைமுடியில் பாதியை எடுத்து எனது நூதனப்போராட்டத்தை தொடருவேன் என கேரளாவை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் கூறியுள்ளார்.

யாஹியா(70) என்பவர் கேரளாவில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் திடீர் அறிவிப்பால் இவர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்.

தனது செலவுக்காக வங்கிக்கு சென்று வரிசையில் காத்திருந்த இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் நீரிழிவு நோயாளி என்பதால் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வீடு திரும்பிய அவர் தனது தலைமுடியில் இருந்து பாதி முடியை எடுத்துள்ளார். குறிப்பாக மோடி ஆட்சியில் இருந்து விலகும்வரை இதுதொடரும் என அவர் சபதம் எடுத்துள்ளார்.