
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் நடாத்தப்படுதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக் கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் காலத்தில் படையினர் முகாம்களுக்குள் வரையறுக்கப்பட வேண்டியது அவசியமானது என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் பணிகளில் படையினர் தற்போது ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் இராணுவத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதாக அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் சுயாதீனமான முறையிலும் நீதியானதாகவும் நடத்தப்பட வேண்டுமாயின் படையினர் முகாம்களில் வரையறுக்கப்பட வேண்டியது அவசியமானது என சம்பந்தன் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.





