வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைப்பு!!

355

 
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பயிற்சியினை நிறைவு செய்த மூவர் இன்று (29.11.2016) காலை 10 மணியளவில் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த காலங்களில் புனர்வாழ்வு பெற்று பன்னிரண்டாயிரம் பேர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

புனர்வாழ்வு நிலையத்தில் பல கைத்தொழிற்பயிற்சிகளை நிறைவு செய்த 10 முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் அஜித் குமார (கொழும்பு, மோதர) , சிங்கராசா எட்மன் (நிலாவெளி,திருகோணமலை) , செல்வரட்ணம் சிறீதரன் (கூமாங்குளம்,வவுனியா) ஆகிய மூவரே சமூகத்துடன் இணைத்துவைக்கப்பட்டனர்.

சிங்கள இளைஞர் ஒருவரும் முன்னாள் விடுதலைப்புலிகளில் இணைந்து செயற்பட்டிருந்ததினால் ஆறுமாதகால புனர்வாழ்வின் பின்னர் இன்று சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தகக்கது.



இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், பூந்தோட்டம் புனர்வாழ் நிலையப் பணிப்பாளர் லெப்.கேணல். எம். ஏ.ஆர்.கமில்டோன், நிலையப் பொறுப்பதிகாரி கப்டன் குணசேகர, பின்னாய்வு நிலைய பொறுப்பதிகாரி, சிறைச்சாலை அமைச்சின் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், முன்னாள் போராளிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1 dsc_0146 dsc_0148 dsc_0151 dsc_0157 dsc_0158 dsc_0168 dsc_0170 dsc_0172 dsc_0176 dsc_0177 dsc_0178 dsc_0180 dsc_0181 dsc_0182 dsc_0183 dsc_0184 dsc_0187 dsc_0188 dsc_0190 dsc_0192 dsc_0195 dsc_0197 dsc_0201 dsc_0210 dsc_0219