அடுத்த ஐபில் தொடர் இலங்கையில்??

495

ipl

அடுத்த ஐபில் போட்டித் தொடர் அல்லது தொடரின் சில போட்டிகள் இந்தியாவிற்கு வெளியில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு வெளியில் இலங்கை அல்லது பங்களாதேஷ் அல்லது இவ்விரு நாடுகளிலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய லோக்சபா தேர்தல் இடம்பெறவுள்ளதால் ஐபில் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லோக்சபா தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.