500 ரூபாயில் திருமணத்தை முடித்த காதல் ஜோடி!!(வீடியோ)

547

wedding

ராஜாஸ்தானைச் சேர்ந்தவர் ஆசிஷ் வஷ்டா, பஞ்சாபை சேர்ந்தவர் சலோனி இவர்கள் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு முசோரி லால் பகதூர் சாஸ்திரி தேசிய ஐஏஎஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பயிற்சி நிறைவு பெற்ற பின்னர் தற்போது மத்தியபிரதேச மாநிலம் கோகத்தில் ஆசிஷ் வசிஷ்டா துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார், தெலுங்கானா மாநிலம் விஜயவாடாவில் சலோனி துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் ஒத்துழைப்போடு கடந்த திங்கட் கிழமை மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் மாலை மாற்றிக்கொண்டு பதிவுத் திருமணமாக நடந்துள்ளது.

ஐஏஎஸ் ஆன இருவரும் தங்களுடைய திருமணத்தை வெகு விமர்ச்சியாக கொண்டாடி இருக்கலாம். ஆனால் எந்த ஒரு வெற்று விளம்பரம் இல்லாமலும், ஆடம்பரம் இல்லாமலும் வெறும் 500 ரூபாயில் தங்களுடைய திருமணத்தை முடித்துள்ளனர்.

மேலும் தற்போது ரூபாய் நோட்டு தடையினால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டில் பலரும் சிக்கன திருமணம் நடத்தி வருகின்றனர்.

இதில் நாமும் ஒரு முன்னுதாரணமாக இருப்போம் என்பதற்காக வெறும் 500 ரூபாயில் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.