பெற்ற மகளை கோவிலுக்கு நரபலி கொடுத்த கொரூர தந்தை!!

571

narabali

மத்திய பிரதேச மாநிலத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் ஜோலா கிராமத்தை சேர்ந்தவர் சத்லால் இர்பாச்சே. இவர் தனது 8 வயது மகள் ரிதுவுடன் துருங்காவில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அங்குள்ள கோவிலுக்கு மகளை அழைத்துக் கொண்டு சென்ற அவர் சாமி தரிசனம் செய்தார். இதை அடுத்து அவர் கோவில் முன்பு மகள் ரிதுவை நரபலி கொடுத்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று சத்லாலை கைது செய்தனர். அவர் சிறுமியை நரபலி கொடுத்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.