பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் 31 பாடசாலைகளுக்கு லீவு!!

555

school closed

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் உள்ள முக்கிய பாடசாலைகள் பல மூடப்படவுள்ளன.

இதன்படி நவம்பர் 6ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை 31 பாடசாலைகள் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோயல், ஆனந்தா, நாலந்தா, தேர்ஸ்டன், விசாகா உள்ளிட்ட 31 பாடசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது