இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இன்று விடுதலை!!

539

Jail

இன்று அனுஸ்டிக்கப்படும் தேசிய சிறை கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிறை கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிய குற்றம் இழைத்தவர்கள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

எனினும் கொலை, போதைப் பொருள், பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளிக்கப்பட மாட்டாரென சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.