காணி ஆணையாளரின் புதிய சுற்று நிருபம் தொடர்பில் வவுனியாவில் செயலமர்வு!

515

vnsa

இலங்கை காணி ஆணையாளரின் புதிய சுற்று நிருபம் தொடர்பாக வவுனியா நகரசபை மண்டபத்தில் கருத்தரங்கு இன்று இடம்பெற்றது.

வவுனியா வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிறுவனத்தின் ஆனுசரணையுடன் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் காணியற்றோர், காணி இழந்தவர்களுக்கான உரிமைகள், காணிப்பிரச்சனைகள், எல்லைப்பிரச்சனைகள், ஆவண இழப்பு, காணி உரிமைப் பிரச்சினை என்பன தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டதுடன் கலந்து கொண்டவர்களின் காணி தொடர்பான பிரச்சனைகளுக்கும் செய்யப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டிருந்தது.

வவுனியா கிராம சேவகர்கள், பொது மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்த இக் கருத்தரங்கில் ஓய்வுபெற்ற ஆணையாளரும் வட மாகாண சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆலோசகருமான க. குகநாதன் கருத்துரைகளை வழங்கியிருந்தார்.