சவுதி அரேபியாவில் படுகொலை குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவருக்கு புதன்கிழமை தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் படுகொலை குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவருக்கு புதன்கிழமை தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாலெம் பின் ஹஸன் அல் – எஸ்ஸி என்ற மேற்படி நபர் தனது சகாவான ஓமர் பின் ஷமி அல் – ஷர்டி என்பவரை சுட்டுக் கொன்றமைக்காக மேற்படி மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அவருக்கு குன்பன்டாஹ் நகரிலுள்ள சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவரது மரணதண்டனையுடன் சவுதி அரேபியாவில் இந்த வருடம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 66 ஆக உயர்ந்துள்ளது.