ஜனாதிபதியின் யாழ். விஜயத்தை முன்னிட்டு யாழ். நகரில் பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நாளை ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அதிகளவு பொலிஸார் யாழ். நகரின் பல பகுதிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அப்பகுதிகளில் பொலிஸார் வீதித்தடைகள் போட்டு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.