மனைவியின் நடத்­தையில் சந்தேகத்தால் மனை­வியை கொலை செய்த கண­வர்!!

545

மனை­வியின் நடத்­தை­யில் சந்­தே­கப்­பட்டு திரு­ம­ண­மான சில தினங்­களில் கண­வ­ரொ­ருவர் மனை­வியை கொலை செய்த சம்­ப­வ­மொன்று தமி­ழ­­கத்தில் இடம்­பெற்­றுள்­ள­து.

தமி­ழ­கத்தின் திருச்சி மாவட்டம் ஆலம்பாக்கம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சிவானந்தம் மகன் ஜோர்ஜ் பிரபு (26). டிரைவர். இவருக்கும், அரியலூர் கருணாநிதி நகரை சேர்ந்த சின்னத்துரை மகள் பவிதா (21) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 29ஆம் திரு­மணம் நடந்­துள்­ளது.

சில நாட்கள் கணவன் மனைவி சந்­தோ­ஷ­மாக இருந்த நிலையில், மனைவியின் நடத்தையில் ஜோர்ஜ் பிரபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்­ளது.
இத­னை­ய­டுத்­து தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 15 நாட்க­ளுக்கு முன்பு பவிதா கணவருடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 10ஆம் திக­தி இரவு ­ஜோர்ஜ் பிரபு, மாமனார் சின்னத்துரைக்கு தொலை­பே­­சியில் தொடர்பு கொண்டு, பவிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் புள்ளம்பாடியிலுள்ள வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்து செல்வதாகவும், உதவிக்கு வரும்படியும் அழைத்­துள்ளார்.

அதற்கு சின்னத்துரை, தான் வெளியூரில் இருப்பதாகவும், மறுநாள் மாமியாரையும் அழைத்து வருவதாகவும் கூறியுள்­ளார்.

சிறிதுநேரம் கழித்து சின்னத்துரை, மருமகனுக்கு தொடர்பு கொண்­டு மகளின் உடல்நிலை குறித்து விசாரித்தபோது பவிதாவை மேல் சிகிச்சைக்காக திருச்சி அருகேயுள்ள இருங்களூர் தனியார் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து நள்ளிரவில் சின்னதுரை போன் செய்தபோது ஜோர்ஜ் பிரபுவின் செல்­போன் சுவிட்ச்­ஓப் செய்யப்பட்டிருந்தது.

மீண்டும் போன் செய்தபோது தனியார் வைத்­தி­ய­சாலை தாதி­யொ­ருவர் செல்­போனை எடுத்து இந்த போனில் பேசியவரின் மனைவி இறந்து விட்டதாக தெரி­வித்­துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சின்னதுரை அவரது மனைவி ஜெசிந்தா மேரி மற்றும் உறவினர்கள் கல்லக்குடி பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்­று பவிதாவை ஜோர்ஜ் பிரபு அடித்து கொலை செய்­ததாக முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

அதன்பேரில் லால்குடி பொலி­ஸார் தனியார் வைத்­தி­ய­­ சா­லைக்கு சென்று பவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனு­ப­்பி வைத்­தனர்.

மேலும் ஜோர்ஜ் பிரபுவை கைது செய்­து விசாரணை நடத்தியதில், கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் பவிதாவை ஜோர்ஜ் பிரபு அடித்து, துண்டால் கழுத்தை இறுக்கியதாகவும், மூச்சு திணறல் ஏற்பட்டதால் கழுத்து பகுதியில் வலி வந்ததாக கூறியதையொட்டி பவிதாவை வைத்­தி­­ய­­சா­லைக்­கு அழைத்து சென்றிருக்கிறார்.

ஆனால் அங்கு பவிதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தகராறில் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஜோர்ஜ் பிரபு விசாரணையில் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் ஜோர்ஜ் பிர­­பு­­வை கைதுசெய்த பொலிஸார் சிறையில் அடைத்­தனர்.