போராட்டத்தில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட இளைஞர் : அதிர்ச்சிப் புகைப்படங்கள்!!

615

இந்தியாவில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின் போது இளைஞர் ஒருவர் கொடும்பாவியை எரிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப், Bathinda பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட Sukhminder Singh Mann என்ற இளைஞன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

பஞ்சாப்பில் இரண்டு வருட ஒப்பந்த சேவை முடிந்தும் பணி நிரந்தரம் செய்யாமல் இருக்கும் அரசை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது இளைஞர் ஒருவர் அரசாங்கத்தை கண்டிக்கும் வகையில் நடுரோட்டில் கொடும்பாவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் பெட்ரோல் பட அவரும் தீ பிடித்து எரிந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.