சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்தடைந்தனர்!!

470

Voting

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபை தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்தடைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இம்முறை இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல் பணிகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்படி உள்ளூர் கண்காணிப்பு குழுக்கள் தேர்தல் செயலகம் மற்றும் கட்சி பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சர்வதேச கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மத்திய மற்றும் வடமேல் மாகாண மக்களுக்கு தேர்தல் தொடர்பில் அதிக ஈடுபாடு இல்லை என தேர்தல் கண்காணிப்பாளர் மத்தியசபை தெரிவித்துள்ளது.

வட மாகாண மக்கள் மத்தியில் தேர்தல் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இம் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ளது.