மருதானையில் விபச்சார விடுதி முற்றுகை : 14 பேர் விளக்கமறியலில்!!

397

pro

மருதானை பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு 13 பெண்கள் உட்பட 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 40 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்த விபச்சார விடுதியை நடத்திச் சென்ற ஒருவரும் இதற்கு உதவியாக இருந்த 13 பெண்களுமே கைதாகியுள்ளனர்.

மேலும் இவர்கள் கொழும்பு, அவிசாலவ, கலேவெல, கடுபொல உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நேற்றையதினம் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர்,எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.