புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இரு விமானங்கள் நேருக்கு நேர் வந்த சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 176 பயணிகளுடன் லக்னோவில் இருந்து வந்த இண்டிகோ விமானம், எதிரே வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்துடன் நேருக்கு நேர் மோத முற்பட்டுள்ளது.
இரு விமானங்கள் நேருக்கு நேர் மிகவும் நெருக்கமாக வந்ததன் காரணமாக அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரிதும் அச்சம் அடைந்தனர்
விமான ஓட்டிகள் ஸ்பைஸ்ஜெட் விமானத்தை பார்த்ததும் உடனடியாக முழு திறனையும் பயன்படுத்தி விமானத்தை நிறுத்திஉள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
இண்டிகோ விமானம் 6இ 769 விளக்கை அணைத்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன






