கொழும்பிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்த முயற்சித்த இலங்கை தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வட பழனியிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் கருத்தரிப்பு சிகிச்சைக்காக செல்வதாக கூறியுள்ளனர்.
எனினும் இவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். இதன்போது இவர்களிடமிருந்து 585 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
38 வயதான சுப்பையா மற்றும் 28 வயதான லதா தங்கவேல் என்போரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.