தந்­தை­யை இழந்த 236 பெண்­க­ளுக்கு திரு­மணம் செய்துவைத்த தொழிலதிபர்!!

562

 
இந்­தி­யாவின் மகேஷ் சவானி என்ற தொழி­ல­திபர் கிறிஸ்­மஸ் தினத்­தன்று தந்­தையை இழந்த வறுமை நிலை­யி­லுள்ள 236 இளம்­பெண்­க­ளுக்கு திரு­மணம் செய்து வைத்­துள்ளார்.

இந்த திரு­மண நிகழ்வு டிசம்பர் 25 ஆம் திகதி நடை­பெற்­றது. இதில் 100,000க்கும் அதி­க­மான விருந்­தி­னர்கள் கலந்து கொண்­டனர்.

மேலும் இந்த திரு­மண நிகழ்வில் மணப்­பெண்­க­ளுக்கு வீட்டு உப­யோகப் பொருட்கள், நகைகள், ஆடைகள் என இல்­லறம் நடத்த தேவையான அனைத்துப் பொருட்களும் வழங்­கப்­பட்­டன.

இது குறித்து வைர வியா­பா­ரி­யான மகேஷ் சவானி கூறும்­போது, “கடந்த வருடம் இதே போன்று தந்­தையை இழந்த 151 இளம்­பெண்­க­ளுக்கு திரு­மணம் செய்து வைத்தேன்.

2008ஆம் ஆண்டு முதல், தந்­தையை இழந்து பிற ஆத­ர­வு­களும் கிடைக்­காமல் இருக்கும் பெண்­களின் திரு­ம­ணத்­துக்கு உதவி புரிந்து வரு­கிறேன். இதனால் சுமார் 800 பெண்கள் என்னை அப்பா என்று அழைக்­கின்­றனர். அவர்­க­ளுக்கு நான் வளர்ப்புத் தந்­தை­யாகி உள்ளேன்.

சமூக சேவை செய்யும் குடும்பப் பின்­ன­ணி­யி­லி­ருந்து நான் வந்­தமையால், வறுமை நிலை­யி­லி­ருக்கும் பெண்­க­ளுக்கு உதவி செய்து வரு­கிறேன்.

ஒவ்­வொரு பெண்­ணையும் என் மகள் போல நினைத்து செலவு செய்­துள்ளேன். யாரா­வது மகளின் திரு­ம­ணத்தை நடத்த கணக்கு பார்ப்­பார்­களா-? எனவே நான் எந்தக் கணக்கும் பார்க்­க­வில்லை.

கடந்த வருடம் நடத்­தப்­பட்ட திரு­ம­ணத்­துக்கு 5 கோடி வரை செலவு செய்தேன். இந்த வருடம் இந்தத் தொகை கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. 2008 ஆம் ஆண்டு எனது பணி­யாளர் ஒருவர் அவ­ரது மகளின் திரு­மண நிகழ்­வுக்கு முன்­ன­தாக இறந்து விட்டார்.

அப்­போ­தி­லி­ருந்து தந்­தை­க­ளற்று வறு­மை­யி­லி­ருக்கும் பெண்­களின் திரு­ம­ணத்­துக்கு உதவி செய்து வரு­கிறேன். உதவி புரி­வதில் நான் இந்து, கிறிஸ்­தவர், முஸ் லிம் என மத வேறு­பாடோ, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற வேறு­பாடோ பார்ப்­ப­தில்லை.

யார் என்­னிடம் உதவி கோரி­னாலும் அவர்­களை வர­வேற்பேன். என்­னிடம் உதவி கேட்டு வரும் இளம் பெண்­களின் தந்தையின் இறப்பு சான்­றி­தழை மட்­டுமே கேட்­கிறேன். இந்த மிகப் பெரிய திரு­மண விழாவில் 50,000க்கும் மேற்­பட்டோர் கலந்து கொண்­டனர்” இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.

ஒவ்­வொரு ஜோடிக்கும் மகேஷ் சவானி நகைகள், புத்­தா­டைகள் கொடுத்து வாழ்த்­தினார். அத்தோடு திரு­ம­ண­மான ஒரு பெண் புகுந்த வீட்­டுக்கு செல்லும் போது, கொண்டு செல்ல வேண்­டிய சீர்­வ­ரிசைப் பொருட்­க­ளுக்­கான அனைத்து செல­வு­க­ளையும் மகேஷ் சவானியே ஏற்றுக் கொண்டார்.

இதுவரை குஜராத்தைச் சேர்ந்த, 800 இளம் பெண்களுக்கு மகேஷ் சவானி திரு மண உதவி புரிந்துள்ளமை குறிப்­பி­டத்­தக்­க­­து.