சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்ற மூவர் ஒட்டுசுட்டானில் கைது!!

395

Deforestation

அனுமதிப்பத்திரம் இன்றி மரங்களை ஏற்றிச் சென்ற மூவர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வசமிருந்து 205 மரக்குற்றிகள் மற்றும் லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவின் ஹெரண அகுரு வீதியில் வைத்தே இவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்கள் ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.