யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் தமிழ்நாட்டில் கைது!!

337

arrest1

நாகப்பட்டினம் சுங்க அதிகாரிகளினால் இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த புதன்கிழமை இலங்கையிலிருந்து சென்ற இவர்கள் பயணித்த படகிற்கான ஆவணங்கள் எவுதும் இவர்களிடம் இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரையிலுள்ள அகதி முகாமில் இவர்களது உறவினர்கள் இருப்பதாகவும் அவர்களை சந்திக்கும் நோக்கிலேயே இந்தியா சென்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

50 வயதான சின்னதுறை மற்றும் 24 வயதான நிரஞ்சன் என்பவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.