வரலாற்றில் முதன் முறையாக ஊர் அறிய திருமணம் செய்த திருநங்கை!!

624

இந்தியாவில் முதன் முறையாக திருநங்கை ஒருவர் ஊர் அறிய திருமணம் செய்த சம்பவம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மும்பையை சேர்ந்த Madhuri Sarode என்ற திருநங்கை, ஜே குமார் சர்மா என்ற ஆண்ணை மணந்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பேஸ்புக்கில் பழகி வந்த இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த டிசம்பர் 28ம் திகதி உள்ளுர் கோவிலில் இருவரின் திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில், சர்மாவின் சகோதரி மற்றும் மைத்துனன் கலந்துக்கொண்டுள்ளனர். ஆனால், சர்மாவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு வரவில்லை.

இந்தியாவில் திருநங்கைகள் திருமணத்தை பதிவு செய்து ஏற்கும் வகையில் இதுவரை சட்டம் ஏதும் இயற்றப்படாத நிலையில், இந்த திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய உச்ச நீதிமன்றத்தை நாடுவேன் என Madhuri Sarode தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த ஜோடிகளை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.