இரவு நேரத்தில் தனியாக வரும் பெண்ணிடம் பாலியல் ரீதியான அத்துமீறல்களில் ஈடுபட்ட இருவரை காட்டும் காணொளி வெளியாகி இந்தியாவில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவின் நவநாகரிக நகரமாக கூறப்படும் பெங்களூர் நகரின் கிழக்கு பகுதியான கம்மனஹள்ளி என்ற குடியிருப்பு பகுதியில் முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி, அருகில் உள்ள தனது வீட்டிற்கு தன்னந்தனியாக நடந்து வந்து கொண்டிருக்கிறார்.
அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவன் அந்தப் பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்த முயல்கிறான்.
சுற்றிலும் வீடுகள் நிறைந்துள்ள அந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களின் வாயிலாக வைரலாக பரவி வருகிறது.
சில வருடங்களுக்கு முன் இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து, இந்திய அரசு பெண்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தியதாக கூறி வரும் நிலையில் மேற்கண்ட சம்பவம் இடம் பெற்றிருப்பது சர்வதேச ரீதியில் பாரிய விமர்சனத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






